தவம்
என்றும் திளைத்திருக்கும் இன்பக் கனாக்களில்
இன்றும் மகிழ்ந்திருந்தேனோ
கண்டும் கேட்டும் ரசித்த காட்சிதனை
மீண்டும் அசைகொண்டிருந்தேனோ
கத்தும் பட்சிதனையும் கதறும் விலங்கினையும்
காணும் ஆவல் தெரிவித்தேனோ
துயில் கொண்டிருந்த ஆதவன் எம்தவத்தால்
வண்ணமயமான பூஉலகை வாழ்ந்துபாரென
உவகையுடன் நமக்கென பொன்மயமாக்கினானே!
No comments:
Post a Comment