தவம்
என்றும் திளைத்திருக்கும் இன்பக் கனாக்களில்
இன்றும் மகிழ்ந்திருந்தேனோ
கண்டும் கேட்டும் ரசித்த காட்சிதனை
மீண்டும் அசைகொண்டிருந்தேனோ
கத்தும் பட்சிதனையும் கதறும் விலங்கினையும்
காணும் ஆவல் தெரிவித்தேனோ
துயில் கொண்டிருந்த ஆதவன் எம்தவத்தால்
வண்ணமயமான பூஉலகை வாழ்ந்துபாரென
உவகையுடன் நமக்கென பொன்மயமாக்கினானே!